200 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது

kaithu
kaithu

தீர்வை வரி கட்டணத்தை செலுத்தாது நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 200 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் பேருவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மருதானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அம்பாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.