போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபட்ட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முன்னெடுத்த சோதனையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
இதன்போது, அவர்களிடம் இருந்து ஹெரோயின், கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்கள், கொழும்பு, ராகமை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.