மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்க யோசனை முன்வைக்கப்படவில்லை! – தினேஷ் குணவர்தன

dinesh gunaawardana
dinesh gunaawardana

மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லையென சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கெலிஓயா பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இன்று(19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.