லொஹானை கைதுசெய்யாவிடில் காவல்துறைமா அதிபருக்கு வழக்கு!

FG e48pVUAEZ I 3
FG e48pVUAEZ I 3

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சி.ஐ.டி.க்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவரை 7 நாட்களுக்குள் கைது செய்யாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக காவல்துறைமா அதிபருக்கு ‘ லெடர் டிமான்ட் ‘ எனப்படும் கோரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளது. 

சட்டத்தரணி பிரபோத ரத்நாயக்க இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.  

குறித்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.க்கு முறைப்பாடளித்த சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் சுதேஷ் நந்திமால் ஆகிய இருவரின் அலோசனைக்கு அமைய இந்த கடிதத்தை அனுப்புவதாக, காவல்துறைமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை கடிதத்தில் சட்டத்தரணி பிரபோத ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.