கொரோனாத் தொற்றால் மூத்த சட்டத்தரணி கேசவன் உயிரிழப்பு!

Screenshot 20211219 173915 1024x600 1
Screenshot 20211219 173915 1024x600 1

மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 74.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவானாக நீண்டகாலம் கடமையாற்றிய அவர், யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராகவும் தனது இயலுமான காலம் வரை பதவி வகித்தவர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த அவர் கனகரட்ணம் சட்ட நிறுவனத்தின் இயக்குநருமாவார்.