இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது

kaithu
kaithu

நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மன்னார் – தெற்கு கடற்பகுதியில் குறித்த மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களது இரண்டு படகுகளும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.இதேவேளை, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே நேற்று (19) அதிகாலை எல்லைத் தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 6 படகுகளுடன் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 43 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கைது செய்யப்பட்ட மீனவர்கள்  யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினூடாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான், 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.