நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களின் அறிவுறுத்துதலுக்கு அமைய தேசிய ரீதியில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டம் தொடர்பாக கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட குழுக்கள் ஆகியவற்றுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடலொன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இன்று (20) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கரைதுறைபற்று மற்றும் வெலிஓயா பிரதேச செயலகங்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன், மேற்குறித்த பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், கிராம மட்ட குழுக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.