மனைவியின் தாக்குதலுக்கு இலக்கான கணவர்!

625.200.560.350.160.300.053.800.200.160.90
625.200.560.350.160.300.053.800.200.160.90

உறங்கிக் கொண்டிருந்த நபரொருவர் கருங்கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் மாகொல, சிறிமங்கல அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (01) முற்பகல் குறித்த இளைஞர் தாக்குதல் சம்பவத்திற்கு பலியானர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் மனைவியே இவரை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தின் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய குறித்த பெண் பிற்பகல் 2.00 மணி அளவில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், மேலும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சபுகஸ்கந்த பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.