அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது

202104091245445737 Tamil News Tamil News fishing ban period start from April 15th SECVPF
202104091245445737 Tamil News Tamil News fishing ban period start from April 15th SECVPF

யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட மேலும் 14 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான இந்திய மீனவர்கள் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதன்பின்னர், அவர்கள் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.