வருட இறுதிக்குள் வெளிநாட்டு ஒதுக்கம் 3 பில்லியன். அமெ. டொலராக அதிகரிக்கப்படும்

ajith N kabral
ajith N kabral

இந்த வருட இறுதிக்குள் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான ‘ அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.