பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமாவார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று (02) மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடமிருந்து இந்த நியமனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.