க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் தோற்றும் மாணவர்களின் விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி வரை இணைய வழியில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பெற்றுக் கொள்ள முடியும்.