நாட்டில் நேற்றைய நாளில், 133,148 பேருக்கு செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 28 இலட்சத்து 40 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 547 பேருக்கு பைஃஸர் முதலாம் தடுப்பூசியும், 370 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், 1,078 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 3,975 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.