தேர்தலில் போட்டியிடவுள்ள சிறிசேன!

Screenshot 2019 09 30 12 38 50 59
Screenshot 2019 09 30 12 38 50 59

பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

பொதுத்தேர்தலில் எந்த சின்னத்தில் களமிறங்குவது என்பது தொடர்பாக பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

இதுதொடர்பில் இதுவரை கலந்துரையாடல் நடத்தப்படவில்லை. எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் கலந்துரையாடல் நடாத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அவர் மேலும் குறிப்பழிட்டார்.

இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவதென நேற்றையதினம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.