எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த தினங்களில் ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்களிடையே மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளது.
அத்துடன், சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்புக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலையும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்றும், இன்றும் மண்ணெண்ணெய்யை கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததென தெரிவிக்கப்படுகிறது