மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது துப்பாக்கி பிரயோகம்

thumb gun
thumb gun

அரியாலை, நெளுக்குளம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது காவற்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அரியாலை, நெளுக்குளம் பகுதியில் நேற்று மாலை உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை காவற்துறை விசேட அதிரடிப்படையினர் தடுத்த நிறுத்த முற்பட்டுள்ளனர்.

எனினும் இந்த உத்தரவினை மீறி அவர் வாகனத்தில் பயணித்துள்ளமையினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த நபர் படுகாயமடைந்ததுடன் அவர்காவற்துறை காவலில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் காவற்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அரியாலை முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என்பவரே காயமடைந்தவர் ஆவார்.