காவற்துறை அதிகாரி போல் பாவனை செய்து மன்னம்பிட்டிய பகுதியில் பெண்ணொருவரை திருமணம் செய்ய முயற்சித்த நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர் சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆவார்.
சந்தேகநபரிடம் இருந்து பிரதான காவற்துறை பரிசோதகரின் முத்திரைகள் கொண்ட சீருடை, சீருடை அணிந்திருந்த புகைப்படம் மற்றும் இரண்டு போலியான 5000 ரூபா நாணயத்தாள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் இன்று பொலன்னறுவை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.