மன்னாரில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

thumb queen 4
thumb queen 4

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை 11 .30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர். சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

இதே வேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.