மலையக தொழிற்சங்கங்களுடன் இணைந்து பயணிப்பதில் ஆட்சேபனை இல்லை!

iratha kirishnen1000x600 scaled 1
iratha kirishnen1000x600 scaled 1

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து மலையக தொழிற்சங்கங்களுடனும் இணைந்து பயணிப்பதில் தமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் – டிக்கோயா வனராஜா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நன்மைகருதி அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து பயணிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.