உரிய தரத்திற்கு அமைய, பாதுகாப்பான முறையில் சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விடுவிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாகவே, எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயுவினை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கப்பலில் இருந்து தரையிறக்குவதற்கு முன்னர், அதனை தரையிறக்கியதன் பின்னரும் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்மூலம் முன்னதாக இருந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
இதனால் ஏற்படும் தாமதம் காரணமாகவே சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.