கொழும்பின் பல பாகங்களில் 12 மணித்தியால நீர்விநியோகத்தடை!

water cut
water cut

திடீர் மின் துண்டிப்பு காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது முதல் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கோட்டே, கடுவலை, தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.