மாடு புல் தின்றதால் 5 பேர் கைது!

NTLRG 20211226171029377701 3
NTLRG 20211226171029377701 3

அளுத்கம 17வது கட்டை பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புல் தின்ற சம்பவம் தொடர்பாக 600 மாடுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 5 கால்நடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் வனப்பாதுகாப்பு பிரிவினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் மாடுகள் நீதிமன்ற காவலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.