யாசகம் பெறுபவரிடமிருந்து பெருந்தொகை பணம் மீட்பு!

beg
beg

தொடரூந்தில் யாசகம் பெற்ற பெண் ஒருவரிடம் இருந்து இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 290 ரூபா மீட்கப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராகமயில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலாக தொடரூந்தில் யாசகம் பெற்ற சந்தர்ப்பத்திலேயே அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் முதலாம் தொடரூந்துகள் யாசகம் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொடரூந்து திணைக்கள அதிகாரிகளால் குறித்த தினத்திலிருந்து விசேட கண்கானிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது சுமார் 50 யாசகம் கேட்பவர்கள் கண்கானிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் 17 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.