காவல்துறை விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பேலியகொட, தர்மடுவத்த புத்தர் சிலைக்கு அருகில் இன்று (27) காலை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தம்மை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் என கூறி பொதுமக்களை அச்சுறுத்தி பணம் மற்றும் மதுபானங்களை பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களால் இந்த நடவடிக்கைகளுக்கான பயன்படுத்தப்பட்ட போலி அடையாள அட்டை மற்றும் எஸ்.ரி.எப் ஜங்கிள் சீருடை அணிந்திருந்த படத்தை வைத்து பொதுமக்களை மிரட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் 21 மற்றும் 39 வயதுடைய பேலியகொட மற்றும் மாத்தறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.