நன்றியுள்ள ஜீவன்களின் காப்பகம் திறப்பு

20200102 163005
20200102 163005

யாழில் தியாகி அறக்கொடை நிறுவனத்தால் நன்றியுள்ள ஜீவன்களின் காப்பகம் அதன் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். அரியாலை ஈச்சங்காடு பகுதியில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபை உறுப்பினர் ம.மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி கலாநிதி க.சசிமாறன் , யாழ். வலய முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் சி. மாணிக்கராசா, யாழ். மாநகர சபை உறுப்பினர் வை.கிருபாகரன் உட்பட மேலும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.