வாகனங்களை திருடி விற்பனை செய்த நபர் கைது!

Temporarily Holding Vehicles and Other Non Essential Items
Temporarily Holding Vehicles and Other Non Essential Items

சாரதிகளுக்கு போதைபொருள் கொடுத்து, வாடகைக்கு பெற்று கொண்ட வாகனங்களை கடத்திய சந்தேக நபர் ஒருவர்  குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குறித்த பானங்களில் பல்வேறு போதைப் பொருட்களை கலந்து வாகன சாரதிகளுக்கு கொடுத்து  விட்டு வாகனங்களை கொள்ளையடித்துள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபர் இணையத்தை பயன்படுத்தி திருடப்பட்ட வாகனங்களை மலிவு விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் 33 வயதுடைய இரத்தினபுரி கிரியெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபர் ஜா – எல  மற்றும் சீதுவ பிரதேசங்களில் முறையே கார் மற்றும் முச்சக்கர வண்டியை திருடி அவ்வாறே விற்பனை செய்துள்ளார்.

இரத்தினபுரி, நிவித்திகல பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்ட நான்கு மில்லியன் ரூபாவுக்கும்  அதிக பெறுமதியான “வேகன் ஆர் ” வாகனமும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் மாவனல்லை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.