பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க, இந்தியாவும், சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்