ஐக்கிய நாடுகளின் அமைதிக்காக்கும் செயற்பாடுகளுக்காக 11 அதிகாரிகள் அடங்கிய 33 பேர் கொண்ட குழுவொன்று சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை குறித்த குழு புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்த குழுவில் 11 இராணுவ அதிகாரிகளும், 22 சிப்பாய்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புறப்பட்டுச் சென்ற குழுவினருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இராணுவத் தளபதி உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் விமான நிலையத்துக்கு பிரசன்னமாகியிருந்ததாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.