பதுளை மாநகர சபையின் முதல்வர் பதவி வெற்றிடமானது – வர்த்தமானி வெளியீடு

953 1 150x150 1
953 1 150x150 1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள பதுளை மாநகர சபையின் முதல்வர் பதவி வெற்றிடமாகவுள்ளதாக தெரிவித்து ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

பதுளை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, முதல்வர் பதவி வெற்றிடமாகவுள்ளதாக தெரிவித்து மேற்படி வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.