15 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது கொவிட் தடுப்பூசியை வழங்க தீர்மானம்

kekaliya
kekaliya

நாட்டில் 15 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது கொவிட் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவர்களுக்கு பைசர் தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

15 – 19 வயதுக்குட்பட்டவர்கள் முதலாம் கொவிட் தடுப்பூசி பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்ததையடுத்தே இவ்வாறு இரண்டாவது கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

அத்துடன், அனைத்து ஆசிரியர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.