சேதன உரப்பாவனை ஊக்குவிப்பு திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்படும்

mahindananda aluthgamage 1
mahindananda aluthgamage 1

சேதன உரப்பாவனையை ஊக்குவிக்கும் தீர்மானத்தை அமுல்படுத்தும்போது தாம் கடுமையாக விமர்சித்துத் தாக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி – வெலிகம்பொல பிரதேசத்தில் நேற்று(07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, நச்சுத்தன்மையற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.