நாட்டில் நேற்றைய நாளில் 37,576 பேருக்கு, பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 43 இலட்சத்து 73 ஆயிரத்து 968 ஆக அதிகரித்துள்ளது.
10 ஆயிரத்து 677 பேருக்கு பைஃஸர் முதலாம் தடுப்பூசியும், 190 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், 431 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும்1,170 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.