திருகோணமலை விபத்தில் இருவர் படுகாயம்

1641894889 ac 2
1641894889 ac 2

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அக்போபுர பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளை கொழும்பிலிருந்து திருகோணமலை பகுதிக்குச் சென்ற வேன் மோட்டார் சைக்கிளை மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாககாவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்தினை ஏற்படுத்திய வேனின் சாரதியை காவற்துறையினர் கைது செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் அக்போபுர மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வேனின் சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.