முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் கிராமத்தில் இடியன் துப்பாக்கி வெடித்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று 10.01.2022 மாலை குடும்ப உறவினர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாட்டு சபம்வத்தின் போது இடியன் துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதன்போது 22 அகவையுடைய பாரதிபுரம் கிராமத்தினை சேர்ந்த சபிசன் என்ற இளைஞன் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உறவுமுறையான 47 மற்றும் 32 அகவையுடைய சந்தேக நபர்கள் இருவரை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.
குடும்ப உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது கிராமத்தின் வீதி ஒன்றில் இடியன் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் முன்னெடுத்து வருவதுடன் இன்று 11.01.2022 சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு கிளிநொச்சி தடயவியல் காவற்துறையினர் வரவழைக்கப்பட்டு வெடித்த இடியன் துப்பாக்கி மற்றும் தடையங்கள் என்பன விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றார்கள்