4 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

kaithu
kaithu

காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் கொனஹேன முகாமிற்கு கிடைத்த தகவலுக்கைமைய, கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 297 கிராம் கேரள கஞ்சாவும்,  போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டியதாக கருதப்படும் 40,000 ரூபா பணமும், இரண்டு கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 4 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ராகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.