கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11.45 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், அது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.