ராஜித சேனாரட்ன மீது நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

namal
namal

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆட்சியில் இருந்த போது உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்வைத்திருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஹம்பாந்தோட்டையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தவறு இழைத்தவர்கள் மறைந்து செயற்படுவதற்கு தற்போதைய அரசாங்கத்தில் ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தற்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற நிலையில் அவர் மீண்டும் போலியான தகவல்களை வெளியிடுவதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.