இலங்கையை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான இயலுமை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியிலும் ஏனைய நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.