முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி- ஜெயராணி பரமோதயன் அவர்கள் கடந்த 19.01.2022 அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 27 கிராம அலுவலர் பிரிவுகளினதும் கிராம அபிவிருத்தி சங்கம்,மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் ,கமக்கார அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை அழைத்து கிராமங்களின் தேவைப்பாடுகள் குறைகள் பிரதேசத்தின் தேவைப்பப்பாடுகள் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி- ஜெயராணி பரமோதயன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஷ் கிராம அலுவலர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்