ஹிக்கடுவ – பவளப்பாறை சரணாலயத்தில் அரியவகை மீன்களை பிடித்த இருவரை வனஜீவராசி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்போது பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஹிக்கடுவ வனஜீவராசி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக குறித்த மீன்களை பிடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (27) காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.