பொருட்களின் விலை ஏற்றம் தாங்க முடியாதது – திஸ்ஸ விதாரண

பேராசிரியர் திஸ்ஸ விதாரண
பேராசிரியர் திஸ்ஸ விதாரண
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதோடு இலங்கையில் குறைந்தது 60% குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
வருடாந்த சராசரியாக 5% முதல் 6% வரை மாத்திரமே உயரும் பொருட்களின் விலைகள், கடந்த மாதத்திற்குள் குறைந்தபட்சம் 14% வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உணவை கூட வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், இன்று மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை பசி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சில குடும்பங்கள் சிரமத்துடன் ஒரு நாளைக்கு ஒரு வேளை மாத்திரமே உண்ண முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு இடையே, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
தேவையற்ற அபிவிருத்திகளை ஒத்திவைத்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.