அதிகாலை தீப்பற்றிய கடை!

1643438994 fre 02
1643438994 fre 02

மட்டக்களப்பு மாமாங்கத்தில் பலசரக்கு கடை ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக மட்டு தலைமையக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (29) அதிகாலையில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாமாங்கம் 3 ம் குறுக்கு வீதியில் வீடு ஒன்றுடன் பலசரக்கு கடையை நடாத்தி வரும் அதன் உரிமையாளர் வழமைபோல நேற்று (28) இரவு பூட்டி சென்றுள்ள நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடை தீப்பற்றியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு காவற்துறை தடயவியல் பிரிவினர் வரவழைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.