200 கிலோ போதைப்பொருளுடன் 9 பேர் கைது!

kaithu
kaithu

போதைப்பொருள் கடத்திய மீன்பிடிக் கப்பலொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கடந்த 26 ஆம்த திகதி முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த போதைப்பொருளை கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 200 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, சர்வதேச கடற்பரப்பில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.