ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

kaithu
kaithu

மன்னார் – எருக்கலம்பிட்டி பகுதியில், ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைய, மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், நேற்று (04) மேற்கொண்ட சுற்றிவளைப்பில், ஒரு கிலோ 76 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த போதைப்பொருளை, உந்துருளி ஒன்றில் கொண்டுசென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அதற்கு உதவி வழங்கியமை தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபர், முச்சக்கர வண்டியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

21 முதல் 39 வயதுக்கு இடைப்பட்ட குறித்த சந்தேகநபர்களை, மன்னார் காவல்துறையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.