வாகன விபத்தில் தந்தை – மகள் பலி!

202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1
202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1

கம்பஹா – அஸ்கிரி – வல்பொல பிரதேசத்தில் உந்துருளியொன்றும், தாங்கி ஊர்தியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (05) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், உந்துருளியில் பயணித்த 42 வயதுடைய நபரும், 6 வயதான அவரது மகளுமே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இரு தரப்பினரினதும் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளைில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.