“எழுச்சியின் கரங்கள்” பெண்கள் வட்டத்தின் அலுவலக திறப்புவிழாவும், இரண்டாம் ஆண்டு விழா நிகழ்வும் வவுனியா சிதம்பரநகர் பகுதியில் இன்று (06) மாலை இடம்பெற்றது.
![IMG 9344](https://thamilkural.net/wp-content/uploads/2022/02/IMG_9344-1024x768.jpeg)
பெண்கள் வட்டத்தின் தலைவர் வி.லோகேஸ்வரி, தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா உதவிப்பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஜீவன் கலந்து கொண்டார்.
![IMG 9347](https://thamilkural.net/wp-content/uploads/2022/02/IMG_9347-1024x768.jpg)
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பெண்கள் வடத்திற்கான புதிய கட்டிடத்தை உதவிப்பிரதேச செயலாளர் நாடாவெட்டி உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பட்டிமன்றம், கவிதா நிகழ்வு போன்ற கலை நிகழ்வுகளுடன் பரிசளிப்பும் இடம்பெற்றது.
![IMG 9338](https://thamilkural.net/wp-content/uploads/2022/02/IMG_9338-1024x768.jpeg)
நிகழ்வில் தமிழ்மணி மேழிக்குமரன், தமிழருவி சிவகுமாரன், கிராமசேவையாளர் பா.ஜனகன், அட்சயம் அமைப்பின் செயலாளர் இ.சஜீந்திரா, உபதலைவர் இரா.இராஜேஸ்வரன், பொதுஅமைப்புக்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.