ராகம மருத்துவ பீட சம்பவம்: சந்தேக நபர்கள் 9 பேருக்கு பிணை

vilakam
vilakam

ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராகம மருத்து பீட மாணவர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினரால் கடந்த முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்பீடத்தின் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ராகம காவல்துறையினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் என 9 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து. சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.