சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 16 இந்திய மீனவர்கள் கைது!

கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். 720x375 1
கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். 720x375 1

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, இதன்போது, மூன்று மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

நெடுந்தீவுக்கு அருகில் நேற்று (திங்கட்கிழமை) இரவு குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த 11 இந்திய மீனவர்களையும் மயிலிட்டி கடற்றொழில் திணைக்களத்தினூடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்