பெரியவெங்காயம், கிழங்கு – மிளகாய் செய்கையாளர்களுக்கு இழப்பீடு

SR
SR

பயிர்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய்ந்து, அதன் பின்னர் பெரியவெங்காயம், கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார சபையில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கமநல சேவை திணைக்களத்தின் ஊடாக தற்போது, அது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.