ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்.
இன்று இடம்பெற்ற மாநகர சபை அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் உள்ள இலங்கை உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரி, முதல்வர் எராஜ் உள்ளிட்ட சிலர் கடந்த ஜனவரி 11ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம் இருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.